Published : 13 Jan 2014 02:56 PM
Last Updated : 13 Jan 2014 02:56 PM

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு: உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ புதிய அறிக்கை

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் புதிய விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ இன்று தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1993ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை நடைபெற்ற நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விசாரணையில், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கு தொடர்பாக தனியார் நிறுவனங்கள், அதன் இயக்குநர்கள் மற்றும் பல அரசு ஊழியர்கள் மீது 16 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இதில் பெரும்பாலான நிறுவனங்கள், சுரங்க வேலைகளை இன்னும் தொடங்கவில்லை என்று சிபிஐ தெரிவிக்கின்றது.

கடந்த வாரம், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் ஏதோ தவறு நிகழ்ந்திருக்கிறது என்று உச்சநீதிமன்றத்தில், மத்திய அரசு ஒப்புகொண்டது. மேலும், சுரங்கங்களை மறு ஒதுக்கீடு செய்வது குறித்து தெளிவான முடிவை மத்திய அரசு அடுத்த வாரம் எடுக்கும் என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வாஹன்வதி தெரிவித்திருந்தார்.

2005-ஆம் ஆண்டிற்குபின், தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலக்கரி படுகைகளை ரத்து செய்யுமாறு மத்திய அரசிற்கு வாஹன்வதி பரிந்துரைந்துள்ளார்.

இவ்வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம். பி. க்கள் விஜய் தார்தா, நவீன் ஜிண்டால், அதித்யா குழுமத்தின் தலைவர் குமார் மங்களம் பிர்லா முன்னார் நிலக்கரி செயலர் பி. சி. பராக் ஆகியோர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x