Last Updated : 06 Nov, 2014 02:51 PM

 

Published : 06 Nov 2014 02:51 PM
Last Updated : 06 Nov 2014 02:51 PM

விஸ்வநாதன் ஆனந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவில் உள்ள சோச்சி நகரில் நாளை தொடங்குகிறது. இதில், நடப்பு சாம்பியனான நார்வே நாட்டைச் சேர்ந்த கார்ல்சனை விஸ்வநாதன் ஆனந்த் எதிர்கொள்கிறார்.

இதனையொட்டி விஸ்வநாதன் ஆனந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, "உங்களது சோச்சி உலக சாம்பியன்ஷிப் பயணத்துக்கு எனது வாழ்த்துக்கள். நாட்டின் பெருமையாக திகழும் உங்களுக்கு எனது வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x