Published : 21 Jun 2016 08:08 AM
Last Updated : 21 Jun 2016 08:08 AM
ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் சட்டப்பேரவை தொகுதிக்கு நாளை (ஜூன் 22) இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. முன்னாள் முதல்வர் முப்தி முகம்மது சயீது மறைவை தொடர்ந்து இங்கு நடைபெறும் தேர்தலில், அவரது மகளும் முதல்வருமான மெஹ்பூபா முப்தி போட்டியிடுகிறார்.
இத்தேர்தலை புறக்கணிக்கு மாறு மக்களுக்கு பிரிவினைவாதி கள் அழைப்பு விடுத்தனர்.
இந்நிலையில் ஹுரியத் மாநாடு தலைவர் சையது அலி ஷா கிலானியின் வீட்டில் பிரிவினைவாத தலைவர்கள் சந்தித்து, ஆலோசனை நடத்தப் போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் கிலானியின் வீட்டுக்கு செல்லும் வழியில் யாசின் மாலிக் நேற்று கைது செய்யப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT