Published : 23 Sep 2016 10:33 AM
Last Updated : 23 Sep 2016 10:33 AM
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ் தான் பகுதியைச் சேர்ந்த பிரி வினைவாத தலைவர் பிரஹம்தாக் பக்டி இந்தியாவிடம் அடைக்கலம் கோரி விண்ணப்பித்துள்ளார்.
இப்போது சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் பக்டி, அங்கிருந்த படி அந்நாட்டு அரசின் அங்கீகார மின்றி தனது பலூச் குடியரசு கட்சியை நடத்தி வருகிறார். தனது கட்சியை தீவிரவாத அமைப்பாக பாகிஸ்தான் அரசு அறிவித்ததால், பக்டி நாட்டைவிட்டு வெளியேறி னார்.
இந்நிலையில், தனக்கு இந்திய அடையாள அட்டையும் பாஸ்போர்ட்டும் வழங்குமாறு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் விண்ணப்பம் செய்துள்ளார்.
இந்த விண்ணப்பம் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மூலம் உள்துறை அமைச்சகத் துக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட் டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து விரைவில் பரிசீலிக்கப்படும் என அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேநேரம், பக்டியின் கோரிக்கையை ஏற்பதற்கு முன்பு பல்வேறு நிலைகளில் இதுகுறித்து ஆய்வு செய்யப்படும் எனத் தெரிகிறது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி இறுதி முடிவு எடுப்பார் எனத் தெரிகிறது.
இதற்கு முன்பு கடந்த 1959-ம் ஆண்டு, திபெத் நாட்டைச் சேர்ந்த தலாய் லாமாவுக்கு மத்திய அரசு அடைக்கலம் கொடுத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT