Published : 24 Aug 2016 07:59 AM
Last Updated : 24 Aug 2016 07:59 AM

டெல்லியில் 2 மாதங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டுகளை நாங்களே செயலிழக்கச் செய்தோம்: என்எஸ்ஜி தலைவர் பெருமிதம்

டெல்லியில் 2 மாதங்களுக்கு முன்பு கண்டுபிடிக் கப்பட்ட வெடிகுண்டுகளை நாங்கள்தான் செயல் இழக்கச் செய்தோம் என்று தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) தலைவர் ஆர்.சி. தயாள் பெருமிதம் தெரிவித்தார்.

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழக (டிஆர்டிஓ) அலுவலகத்தில் 2 மாதங்களுக்கு முன்பு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தச் சம்பவம் அப்போது டெல்லியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக என்எஸ்ஜி தலைவர் தயாள் டெல்லியில் நேற்று கூறியதாவது:

டிஆர்டிஓ அலுவலக வெடிகுண்டுகளை வேறு யாராலும் கையாள முடியவில்லை. எனவே என்எஸ்ஜி-க்கு தகவல் தெரிவித்தனர். நாங்கள்தான் அந்த வெடிகுண்டுகளை செயல் இழக்கச் செய்தோம். அவை இரண்டாம் உலகப் போர் காலத்து வெடிகுண்டுகள். அலுவலக வளாகத்தில் கட்டுமானப் பணிகள் நடந்தபோது அந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வெடிகுண்டுகளைச் செயல் இழக்கச் செய்வதில் எங்கள் குழுவினர்தான் மிகச் சிறந்தவர்கள். வேறு எந்தப் படையாலும் இத்தகைய சூழ்நிலைகளைக் கையாள முடியாது. பதான்கோட் விமானப்படை தள தாக்குதல் சம்பவத்தின்போது என்எஸ்ஜி வீரர்கள் நுழைந்த ஒன்றரை மணி நேரத்தில் அனைத்து தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் திறன் என்எஸ்ஜிக்கு உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x