Published : 01 May 2014 02:30 PM
Last Updated : 01 May 2014 02:30 PM
ரு.700 கோடி ஹவாலா மோசடியில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டுள்ள அப்ரோஸ் பட்டா மீது அமலாக்கத் துறை புதிதாக ஒரு வழக்கு பதிவு செய்துள்ளது.
முன்னதாக, அமலாக்கத் துறையினர் சூரத்தில் உள்ள அதிகாரிகள் முன்பு அப்ரோஸை ஆஜர்படுத்தியதாக தகவல்கள் கூறுகின்றன. அப்ரோஸ் விசா ரணைக்கு ஒத்துழைப்பு தர மறுப்பதாகவும், அவர் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப் படுவார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த வியாபாரியான அப்ரோஸ், வைரம் இறக்குமதி செய்ததாக பொய்யான ரசீதின் அடிப்படையில், வெளிநாடு களுக்கு பணம் அனுப்பியதாக கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
அன்னியச் செலாவணி நிர்வாகச் சட்டத்தின் (பெமா) கீழ், அப்ரோஸ் மீது அமலாக்கத் துறையினர் ஏற்கெனவே வழக்கு பதிவு செய்துள்ளனர். இப்போது, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நரேந்திர மோடி அப்ரோஸுடன் இருக்கும் புகைப்படத் தொகுப்பு அடங்கிய சி.டி.யை காங்கிரஸ் வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து, காங் கிரஸ் வேட்பாளர் முகமது அசாருதீ னுடன் அப்ரோஸ் இருக்கும் சி.டி.யை பாஜக செவ்வாய்க்கிழமை வெளியிட்டது குறிப்பிடத் தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT