ஜம்முவில் ஊடுருவல் முறியடிப்பு: 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்முவில் ஊடுருவல் முறியடிப்பு: 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
Updated on
1 min read

ஜம்முவில் பயங்கரவாதிகள் ஊடுருவலை இந்திய ராணுவம் முறியடித்ததுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் கெரான் பகுதி வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்துக்கும் இடையே நேற்று மாலை முதல் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த 24ம் தேதியன்று, இந்திய எல்லைப் பகுதியில் கெரன் பகுதி வழியாக பயங்கர ஆயுதங்களுடன் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையின் ஆதரேவாடு 30 முதல் 40 பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். இந்த முயற்சியை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு படையினர் 12வது தொடர்ந்து பயங்கரவாதிகளுடன் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் கெரன் செக்டாரில் பயங்கரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்துக்கும் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நேற்றும் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in