Published : 10 Jun 2017 09:38 AM
Last Updated : 10 Jun 2017 09:38 AM

மத்திய பிரதேசத்தில் அமைதியை ஏற்படுத்த முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உண்ணாவிரதம்

மத்திய பிரதேசத்தில் அமைதியை ஏற்படுத்த உண்ணாவிரதம் இருந்து வருகிறேன் என்று மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் பிரச்சினை களைக் கேட்டறிய அவர்களை இன்று நேரில் சந்தித்துப் பேசவும் முதல்வர் திட்டமிட் டுள்ளார்.

வேளாண் விளைபொருட்களை மாநில அரசு நியாயமான விலையில் கொள்முதல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய பிரதேச விவசாயிகள் கடந்த 1-ம் தேதி முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 6-ம் தேதி மான்ட்சர் பகுதியில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 விவசாயிகள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து தலைநகர் போபால், இந்தூர் உட்பட மாநிலம் முழுவதும் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இதுதொடர்பாக மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது: மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த உண்ணாவிரதம் இருந்து வருகிறேன். போபால் தசரா மைதானத்தில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை சனிக்கிழமை நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிவேன். அதேநேரம் வன்முறையில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அரசு முன்னுரிமை அளிக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனிடையே மத்திய பிரதேச விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x