5 எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்க மத்திய அரசு முடிவு

5 எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்க மத்திய அரசு முடிவு
Updated on
1 min read

மக்களவையில் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியதாவது:

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் போன்று, மருத்துவக் கல்லூரிகளுடன் கூடிய மருத்துவமனைகள் தொடங்க 17 மாநிலங்களில் இருந்து பரிந்துரைகள் வந்துள்ளன. மத்திய அரசு படிப்படியாக இந்த மாநிலங்களில் எய்ம்ஸ் போன்ற நிறுவனங்களைத் தொடங்க முடிவு செய்துள்ளது.

இதில் மங்களகிரி (ஆந்திரப் பிரதேசம்), கல்யானி (மேற்கு வங்கம்), நாக்பூர் (மகாராஷ்டிரா), கோரக்பூர் (உத்தரப் பிரதேசம்), பதின்டா (பஞ்சாப்) ஆகிய 5 இடங் களில் புதிய எய்ம்ஸ் மருத்துவ மனைகள் தொடங்க தற்போது முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்குமுன் ஜம்மு காஷ்மீர், தமிழ்நாடு, இமாச்சலப் பிரதேசம், அசாம், பிஹார் ஆகிய மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவனைகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அசாம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் எய்ம்ஸ் அமையவுள்ள இடம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு ஜே.பி.நட்டா கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in