Published : 30 Jul 2016 06:03 PM
Last Updated : 30 Jul 2016 06:03 PM
கடந்த ஆண்டு மார்ச்சில் அமெரிக்க ஆய்வு மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த புகாரில் ‘பீப்லி லைவ்’ என்ற பாலிவுட் திரைப்பட இணை இயக்குநர் மஹ்மூத் பரூக்கியை டெல்லி நீதிமன்றம் குற்றவாளி என்று அறிவித்தது.
கூடுதல் அமர்வு நீதிபதி சஞ்சய் ஜெயின் இவர் மீது குற்றச்சாட்டை எடுத்துக் கூறும்போது, “மார்ச் 28-ம் தேதி குற்றம்சாட்டப்பட்ட பரூக்கி வசித்து வந்த தெற்கு டெல்லியின் சுக்தேவ் விஹார் இல்லத்துக்கு வந்த ஆய்வு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது ஐயத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
பாபா கோரக்நாத் என்பவரைப் பற்றிய ஆய்வுக்காக தகவல் திரட்ட இணை இயக்குநர் மஹ்மூத் பரூக்கியை அவரது இல்லத்திற்குச் சென்றுள்ளார் இந்த பெண் ஆய்வாளர்.
அப்போது பரூக்கி அந்த ஆய்வாளரை பலாத்காரம் செய்ததாகப் புகார் எழ, டெல்லி போலீஸ் இவர் மீது பிரிவு 376-ன் கீழ் பலாத்கார வழக்கும், பிரிவு 201-ன் கீழ் சாட்சிகளை அழித்த வழக்கையும் தொடர்ந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT