Published : 07 Jan 2014 05:03 PM
Last Updated : 07 Jan 2014 05:03 PM

ஏ.கே.கங்குலி ராஜிநாமா: மேற்கு வங்க ஆளுநர் ஏற்பு

பாலியல் புகாரின் காரணமாக, மேற்கு வங்க மனித உரிமைகள் ஆணையத் தலைவராக இருந்த ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே. கங்குலியின் ராஜிநாமாவை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.

ஏ.கே.கங்குலியின் ராஜிநாமாவை, மேற்கு வங்க ஆளுநர் எம்.கே.நாராயணன் ஏற்றுக்கொண்டதாகவும், மாநில அரசிடம் அது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் உயர் வட்டாரங்கள் தெரிவித்தன.

நீதிபதி கங்குலியிடம் பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றியபோது அவர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பெண் வழக்கறிஞர் ஒருவர் அண்மையில் புகார் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து மேற்கு வங்க மனித உரிமை ஆணைய தலைவர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலி யுறுத்தி வந்தனர். தன் மீது அபாண்ட மான குற்றச்சாட்டு சுமத்தப்படுவதாக தெரிவித்த ஏ.கே.கங்குலி, பதவி விலக மறுத்துவிட்டார்.

இதன் தொடர்ச்சியாக, அவரை பதவியில் இருந்து நீக்க குடியரசுத் தலை வருக்கு பரிந்துரை செய்ய மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தவுடன் கங்குலியின் பதவியைப் பறிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் என்று அட்டர்னி ஜெனரல் ஜி.இ.வாகன்வதி தெரிவித்திருந்தார். அதற்கு முன்னதாகவே ஏ.கே. கங்குலி தனது பதவியை ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x