Published : 30 Jan 2017 10:06 AM
Last Updated : 30 Jan 2017 10:06 AM
சட்டப்பேரவைத் தேர்தல் நடை பெறும் 5 மாநிலங்களில் பிப்ரவரி 4 முதல் மார்ச் 8 வரை வாக்குப் பதிவுக்கு பிந்தைய கணிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் வரும் 4-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இதையொட்டி தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் பிப்ரவரி 4-ம் தேதி காலை 7 மணி முதல் முதல் மார்ச் 8-ம் தேதி மாலை 5.30 மணி வரை வாக்குப்பதிவுக்கு பிந்தைய கணிப்புகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதனை பத்திரிகை மற்றும் மின்னணு ஊடகங்கள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT