Published : 05 Sep 2016 10:29 AM
Last Updated : 05 Sep 2016 10:29 AM

கொல்கத்தாவில் புற்றுநோயை குணமாக்கிய ஒளி: அன்னை தெரசாவின் முதல் அற்புதத்தை வெளிப்படுத்திய பெண்

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ஏழை பழங்குடியினப் பெண் மோனிகா பெஸ்ரா (50). இவருக்கு 5 குழந்தைகள் உள்ளனர். இவர் கொல்கத்தாவில் இருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசிக்கிறார். இவரது வயிற்றில் புற்றுநோய் முற்றிய நிலையில் பெரிதும் அவதிப்பட்டு வந்தார். அவரால் சாப்பிட முடியவில்லை. தூங்க முடியவில்லை.

எத்தனையோ மருத்துவ மனைகள், எத்தனையோ மருத்து வர்களை பார்த்தும், சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. அப்போது அன்னை தெரசாவை பற்றி கேள்விப்பட்டு அவரை மனப்பூர்வமாக பிரார்த்தனை செய் துள்ளார். இதுபற்றி என்டிடிவி.க்கு அளித்த பேட்டியில் மோனிகா பெஸ்ரா கூறியதாவது:

என் வயிற்றில் மிகப்பெரிய கட்டி உருவானது. புற்றுநோய் என்று கண்டுபிடிக்கப்பட்ட பின் சிகிச்சை பெற்று வந்தேன். ஆனால், குண மாகவில்லை. கடந்த 1998-ம் ஆண்டு ஒரு முறை சர்ச்சுக்கு சென்றேன். அங்கிருந்த அன்னை தெரசா போட்டோவில் இருந்து ஒரு ஒளி பீறிட்டு என் மீது பாய்ந்தது. நான் அதிர்ச்சி அடைந்தேன். என் உடல் நடுங்கியது. கண்ணை இறுகி மூடிக் கெண்டேன்.

அதன்பின், கடந்த 2003-ம் ஆண்டு இரண்டாம் போப் ஜான் பாலை சந்தித்தேன். எனக்கு ஏற் பட்ட அனுபவம் பற்றி கேட்டார். அன்னை தெரசாவின் அற்புதம் பற்றி வாடிகனும் உறுதிப்படுத்தி யது. அன்னை தெரசா எனக்கு கடவுள் மாதிரி. நான் குணமடைய எனக்கு உதவினார். அதை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பேன்.

புற்றுநோயால் 18 ஆண்டுக ளுக்கு முன்னர் தான் பட்ட வலியை நினைத்தாலே பயமாக இருக் கிறது. சிலிகுரியில் உள்ள மருத்து வமனைக்கு என்னை அழைத்து சென்றனர். அங்கு ரத்த பரிசோ தனை செய்தனர். நான் மிகவும் அபாய கட்டத்தில் இருப்பதாக கூறினர். அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றனர்.

ஒருநாள் அன்னை தெரசாவின் ‘மிஷனரிஸ் ஆப் சேரிட்டி’யில் இருந்து வந்திருந்த சகோதரிகள், என் வயிற்றில் ஒரு டாலர் கட்டி விட்டனர். சில மணி நேரங்களில் வயிற்று வலி போய்விட்டது. அதே போல் புற்றுநோயும் மறைந்துவிட் டது. கடுமையான வயிற்றுவலி யால் தூங்க முடியாமல் இருந் தேன். ஆனால், என் வயிற்றில் டாலர் கட்டிவிட்ட அன்று எப்படி தூங்கினேன் என்று தெரியவில்லை.

அதிகாலை 1 மணிக்கு கண் விழித்தேன். புற்றுநோய் மறைந்து விட்ட உணர்வு ஏற்பட்டது. வயிற் றில் இருந்த வீக்கம் காணவில்லை. எனக்கு அருகில் படுத்திருந்த பெண்களை எழுப்பி கூறினேன். அவர்களும் என் வயிற்றை பார்த்து வீக்கம் இல்லை என்றனர்.

இவ்வாறு மோனிகா கூறினார்.

ஆனால், ‘‘அற்புதம் எதுவும் இல்லை. மருத்துவ அறிவியல் தான் காரணம்’’ என்று மருத்துவர் கள் கூறினர். இதுகுறித்து மோனிகா வின் கணவர் சென்கு முர்மு கூறும் போது, ‘‘மருத்துவர்களால் மோனி காவின் புற்றுநோயை குணமாக்க முடியவில்லை. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மட்டும்தான் அவர்கள் கூறினர்’’ என்கிறார்.

அன்னை தெரசாவின் 2-வது அற்புதம் பிரேசில் நாட்டை சேர்ந்தவருக்கு நடந்ததாக தகவல் வெளியானது. பிரேசில் நாட்டில் மூளை பாதிக்கப்பட்டு கோமாவில் இருந்தார் ஒருவர். அவரது குடும்பத்தினர் அன்னை தெரசாவை பிரார்த்தனை செய்ததால் அவர் சுயநினைவுக்கு திரும்பினார். மூளை பாதிப்பும் சரியானதாக தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x