Published : 18 Jan 2014 11:10 AM
Last Updated : 18 Jan 2014 11:10 AM

சுனந்தா மர்ம மரணம்: இன்று பிரேத பரிசோதனை

மர்மமான முறையில் இறந்து போன மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தாவின் உடல் பிரதேப் பரிசோதனைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டது.

இன்று பிற்பகலில் சுனந்தா உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லி லீலா பேலஸ் ஓட்டலில் உள்ள 345-ஆம் எண் அறையில் இருந்து சுனந்தாவின் சடலம் அதிகாலை 3.30 மணியளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

டெல்லி காவல்துறையினர் விசாரணை:

சுனந்தா தங்கியிருந்த அறையை டெல்லி காவல்துறையினரும், தடயவியல் நிபுணர்களும் முழுமையாக ஆய்வு செய்தனர். சம்பவம் நிகழ்ந்த நட்சத்திர உணவு விடுதியில் உள்ள ரகசிய கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x