Published : 01 Jul 2016 08:07 PM
Last Updated : 01 Jul 2016 08:07 PM
காஷ்மீர் எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை ராணுவத்தினர் முறியடித்தனர்.
குப்வாரா மாவட்டம், கர்னா வனப் பகுதியில், சஃபார் என்ற இடத்தின் அருகே, பயங்கர ஆயுதங்கள் ஏந்திய தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றனர். இதைக் கண்டதும் ராணுவ வீரர்கள் அவர்களை தடுத்து நிறுத்த முயற்சித்தனர்.
அப்போது, இரு தரப்புக்கும் இடையே ஒரு மணி நேரத்துக்கும் மேல் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. பின்னர், தாக்குதலை சமாளிக்க முடியாமல் தீவிரவாதிகள் தப்பியோடினர்.
இந்த மோதலில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டாலும், அப்பகுதியில் தேடுதல் வேட்டை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக, போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT