Published : 30 May 2017 01:54 PM
Last Updated : 30 May 2017 01:54 PM
நீச்சல் குளத்தில் தவறி விழுந்த சக அதிகாரிகளை காப்பாற்ற முயன்ற இளம் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் அதே குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பயிற்சி முடித்த கடைசி நாளில் அவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஷிஸ் தாஹியா 30 வயதான இளம் ஐஏஎஸ் அதிகாரியான இவர், இந்திய அயலுறவுத் துறையில் பணியில் வாய்ப்பு கிடைத்தது. அதற்கான பயிற்சியை நேற்றுடன் நிறைவு செய்தார்.
பயிற்சி நிறைவை கொண்டாடும் வகையில் டெல்லியில் நண்பர்களுடன் விருந்துக்கு சென்ற ஆஷிஸ், உணவு விடுதியில் இருந்த நீச்சல் குளத்தில் குளிக்க தயாராகியுள்ளார். அப்போது அவருக்கு அருகில் இருந்த பெண் அதிகாரி ஒருவர் மற்றும் குழந்தைகள் இருவர் நீச்சல் குளத்தில் தவறி விழுந்தனர். அவர்களைக் காப்பாற்ற நீச்சல் குளத்தில் குதித்த ஆஷிஸ் மூச்சு திணறி, குளத்தில் மூழ்கினார்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு ஆஷிஸுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து விசாரணை நடத்திய டெல்லி போலீசார் ஆஷிஸ் மது அருந்தியிருந்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 வயதில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று அயலுறவு பணிகளுக்கு செல்லவிருந்த நிலையில் ஆஷிஸுக்கு ஏற்பட்ட இந்த மரணம் அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ஆஷிஸின் மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும் அவரது பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT