Published : 06 Jan 2014 10:45 AM
Last Updated : 06 Jan 2014 10:45 AM

டெல்லியில் கடும் பனி மூட்டம்: விமான சேவை பாதிப்பு

டெல்லியில் இன்று காலை கடும் பனி மூட்டம் நிலவியதால், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 150 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களின் போக்குவரத்து தாமதமானது.

கடந்த 2010-ஆம் ஆண்டிற்குப் பிறகு டெல்லியில் இந்த ஆண்டு தான் கடும் பனிமூட்டம் நிலவி வருவதாக தெரிவித்தார்.

நேற்றிரவு 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரை டெல்லியில் கடும் பனி மூட்டம் நிலவியது. இதனால் விமான் ஓடுதளத்தில் போதிய வெளிச்சம் இல்லாமல் போனது.

இதன் காரணமாக, இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 51 உள்நாட்டு மற்றும் 39 சர்வதேச விமானங்களும், அங்கு வந்து சேர வேண்டிய 39 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இது தவிர 52 விமானங்கள் அமிர்தசரஸ், லக்நொவ் விமானநிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

விமான சேவை ரத்து செய்யப்பட்டது, நேரம் மாற்றியமைக்கப்பட்டது குறித்த தகவல்கள் சரிவர பயணிகளுக்கு சென்றடையதால், டெல்லி விமான நிலையத்தில் பயணிகள் பெரும் தவிப்புக்குள்ளாகினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x