Published : 26 Dec 2013 07:07 PM
Last Updated : 26 Dec 2013 07:07 PM

வாய்மையே வெல்லும்: தீர்ப்புக்குப் பின் மோடி ட்வீட்

குஜராத் கலவர வழக்கில் தன்னை குற்றமற்றவர் என்று வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மாநில முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான மோடி, 'வாய்மையே வெல்லும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் எம்பி இஷான் ஜாஃப்ரி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில், நரேந்திர மோடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, இஷான் ஜாஃப்ரி மனைவி ஜாகியா ஜாஃப்ரி தொடர்ந்த மனுவை, அகமதாபாத் நடுவர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

நாடு தழுவிய அளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில், தீர்ப்பு வெளியானவுடன் குஜராத் முதல்வர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் 'வாய்மையே வெல்லும். உண்மை மட்டுமே வெற்றி பெறும்' என்று கருத்தைப் பதிவு செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x