Published : 12 Nov 2014 09:53 AM
Last Updated : 12 Nov 2014 09:53 AM
ஹைதராபாத்தில் நேற்று அதிகாலை அதிக பனிமூட்டம் காரணமாக விமானங்கள் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன. இதனால் பயணிகள், உறவினர்கள் விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஹைதராபாத்தில் தற்போது அதிகாலை வேளையில் பனி மூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக நேற்று அதிகாலை ஷார்ஜா, மஸ்கட், அபுதாபி ஆகிய வெளிநாடுகளில் இருந்து ஹைதராபாத் ஷம்ஷாபாத் விமான நிலையத்துக்கு வந்த விமானங்கள் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டன. இதனால் விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகளின் உறவினர்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு செல்லவிருந்த பயணிகள், பயணம் தாமதமானதால் விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை விமான நிலைய அதிகாரிகள் சமாதானம் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT