Published : 25 Mar 2017 10:05 AM
Last Updated : 25 Mar 2017 10:05 AM
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் தொடர்பான வழக்கில், மேலும் 5 பேருக்கு சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததாகப் புகார் எழுந்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. முன்னாள் காங்கிரஸ் எம்.பி. நவீன் ஜிண்டால் உட்பட பலர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ ஏற்கெனவே குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் துணை குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது.
அதை சிபிஐ சிறப்பு நீதிபதி பாரத் பராசர் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டார். பின்னர், ஜிண்டால் ஸ்டீல் நிறுவனத்தின் ஆலோசகர் ஆனந்த் கோயல், குர்கானைச் சேர்ந்த கிரீன் இன்ப்ரா நிறுவனத்தின் துணைத் தலைவர் சித்தார்த் மத்ரா, மும்பையைச் சேர்ந்த கே.இ.இன்டர்நேஷனல் நிறுவன தலைமை நிதி அதிகாரி ராஜீவ் அகர்வால், நிஹார் ஸ்டாக்ஸ் லிமிடெட் இயக்குநர் பி.எஸ்.என்.சூர்யநாராயணன், மும்பை எஸ்ஸார் பவர் லிமிடெட் நிர்வாக துணைத் தலைவர் சுஷில் குமார் மரூ ஆகிய 5 பேர் நேரில் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.
ஐந்து பேரும் ஏப்ரல் 10-ம் தேதிக்குள் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT