Last Updated : 25 Jan, 2017 03:22 PM

 

Published : 25 Jan 2017 03:22 PM
Last Updated : 25 Jan 2017 03:22 PM

காஷ்மீரில் பனிச்சரிவு: ராணுவ அதிகாரி உட்பட 5 பேர் பலி

காஷ்மீரின் பந்திபோரா, கந்தர்பால் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ராணுவ அதிகாரி ஒருவர் உட்பட 5 பேர் பலியாகினர்.

இதுகுறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் 'தி இந்து'ஆங்கிலத்திடம் கூறும்போது," கந்தர்பால் மாவட்டத்திலுள்ள சோனாமார்க் பகுதியில் இன்று (புதன்கிழமை) பனிச்சரிவில் சிக்கி ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்" என்று கூறினார்.

சோனாமார்க்கிலுள்ள ராணுவ முகாமில் 5 அடி உயரமுள்ள பெரிய பனிப் பாறைகள் சரிந்து விழுந்துள்ளன. இதில் அந்த ராணுவ முகாம் புதையுண்டது.

பொதுமக்கள் 4 பேர் பலி

இதேபோல், பந்திபோரா மாவட்டத்தில் பனிச்சரிவில் சிக்கி பொதுமக்கள் 4 பேர் பலியாகினர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறும்போது, "காஷ்மீரின் பந்திபோரா பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பொதுமக்கள் 4 பேர் பலியாகினர்.

பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ஹபிபுல்லா (50), குல்சன் பனோ (19), அசிஸி (48), இர்பான் (17) ஆகியோரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ராணுவ வீரர்கள் மற்றும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்" என்று கூறினார்.

காஷ்மீரின் பந்திபோரா பகுதியில் செவ்வாய்க்கிழமை முதல் கடுமையான பனிபொழிவு நிலவுகிறது. இதனால் வடக்கு மாற்று தெற்கு காஷ்மீரில் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x