Published : 28 Apr 2017 10:27 AM
Last Updated : 28 Apr 2017 10:27 AM

தேவகவுடா- சித்தராமையா சந்திப்பு: காங்.குடன் கூட்டணி இல்லை குமாரசாமி திட்டவட்டம்

கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் காங்கிரஸ், பாஜக, மஜத உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இப்போதே அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா முன்னாள் பிரதமரும், ம.ஜ.த. கட்சியின் தேசியத் தலைவருமான தேவகவுடாவை அண்மையில் சந்தித்துப் பேசினார். இதனால் கூட்டணி ஏற்படும் என்று பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால், தேவகவுடா மகனும், மஜத மாநிலத் தலைவருமான குமாரசாமி, பெங்களூருவில் நேற்று கூறியதாவது:

அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளிலும் மஜத தனித்து போட்டியிடும். வேட்பாளர் பட்டியல் வந்த பிறகு, தேவகவுடா உறுதி செய்வார். காங்கிரஸ், பாஜக கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மஜதவில் இணைய இருக்கிறார்கள்.

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நண்பனும் இல்லை. எனவே தேவகவுடாவும், அவரது முன்னாள் சீடருமான சித்த ராமையாவும் சந்தித்துப் பேசியதை அரசியலாகப் பார்க்கக் கூடாது.

தேவகவுடாவின் ஹாசன் மக்களவைத் தொகுதியின் நலனுக்காகவே இருவரும் சந்தித்துப் பேசியுள்ளார்கள். இதை வைத்து கூட்டணி கதையை பாஜக கட்டவிழ்த்து விட்டிருக் கிறது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இட மில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x