Published : 19 Jul 2016 10:17 AM
Last Updated : 19 Jul 2016 10:17 AM
கேரளாவில் தமிழ்ப் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு நேற்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கொச்சி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த அதுல் திவாகரன் (23), அனிஸ் (29), மனோஜ் (22), நியாஸ் (30) ஆகியோர் சேர்ந்து கடந்த 2014 பிப்ரவரி 14-ம் தேதி 2 தமிழ்ப் பெண்களை வேலைக்காக ஆட் டோவில் அழைத்துச் சென்றனர்.
கலமச்சேரி எச்எம்டி வளாகத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றபோது 37 வயதான பெண்ணை பலாத்காரம் செய்தனர். 55 வயது மூதாட்டியை அங்குள்ள மரத்தில் கட்டி வைத்தனர். பின்னர் இரு பெண்களின் நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுதொடர்பாக கேரள போலீஸார் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு எர்ணாகுளம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி நிசார் நேற்று தீர்ப்பு அளித்தார். அதன்படி அதுல் திவாகரன், அனிஸ், மனோஜ், நியாஸ் ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூ.55 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT