Published : 03 Apr 2017 02:44 PM
Last Updated : 03 Apr 2017 02:44 PM
ஒலிம்பிக் மங்கை பி.வி.சிந்து, ஸ்பெயினின் கரோலினா மரினைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றதற்கு, அமிதாப் பச்சன் மற்றும் ஷாருக் கான் வாழ்த்து தெரிவித்துள்ளானர்.
இந்தியா ஓபன் பாட்மிண்டன் தொடரில் பெண்களுக்கான இறுதிப் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை வீழ்த்தி, பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமிதாப், ''சிந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மிகப்பெரிய வாழ்த்துகள்! ஒலிம்பிக் தோல்விக்குப் பிறகான அழகிய பழிவாங்கல் இது. ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருக்கிறது'' என்று கூறியுள்ளார்.
அதே நேரத்தில் ஷாருக் தனது ட்விட்டர் பதிவில், ''சிந்துவின் அபார செயல்திறனைக் கண்டேன். நாட்டைப் பெருமைப்படுத்தியதற்கு வாழ்த்துக்களும், நன்றியும்!'' என்று கூறியுள்ளார்.
ஒலிம்பிக் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கரோலினா மரினிடம் தோற்ற சிந்து, வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT