டிசம்பர்-16 பாலியல் வழக்கு: டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு

டிசம்பர்-16 பாலியல் வழக்கு: டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு
Updated on
1 min read

டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன் கொடுமை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் மேல் முறையீட்டு மனு மீது டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

நீதிபதிகள் ரேவா கேத்ராபால், பிரதீபா ராணி தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்குகிறது.

டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் தேதி ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பாலத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவி, சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.

இந்த வழக்கில் ஒரு குற்றவாளிக்கு, சிறார் என்ற அடிப்படையில் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது சிறார் நீதிமன்றம்.

ராம்சிங் என்ற முக்கிய குற்றவாளி, திகார் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மற்ற 4 குற்றவாளிகளான முகேஷ் (26), அக்ஷய் தாக்கூர் (28), பவன் குப்தா (19), சர்மா (20) ஆகியோருக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த 2013 செப்டம்பர் 13-ம் தேதி மரண தண்டனை விதித்தது.

தூக்கு தண்டனையை எதிர்த்து நால்வரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in