Last Updated : 05 Nov, 2014 08:29 PM

 

Published : 05 Nov 2014 08:29 PM
Last Updated : 05 Nov 2014 08:29 PM

முல்லை பெரியாறு பிரச்சினையில் சட்ட ரீதியிலான வழிகளை பரிசீலிப்போம்: உம்மன் சாண்டி

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடி என்ற அளவிலேயே தொடர தேவையான சட்ட ரீதிலியிலான வழிகள் குறித்து பரிசீலித்து வருவதாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறினார்.

இது குறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் உம்மன் சாண்டி கூறியதாவது, " முல்லை பெரியாறு அணையைப் பார்வையிட்ட தலைமைச் செயலாளர், நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதை அமைச்சரவையில் குறிப்பிட்டார்.

அணை பகுதியில் பாதுகாப்பு காரணங்களுக்காக அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தக் கூடாது என்ற கேரள அரசின் கோரிக்கையை, உச்ச நீதிமன்ற நியமித்த உயர்நிலைக் குழு நிராகரித்தது. கேரள மக்களின் பாதுக்காப்பை பொருட்டு இந்த விவகாரத்தில் சட்டரீதியான வழிகள் குறித்து அரசு ஆலோசித்து வருகிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x