Published : 22 Jan 2017 12:36 PM
Last Updated : 22 Jan 2017 12:36 PM

சந்திரபாபு நாயுடுவுக்கு கூடுதல் பாதுகாப்பு

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு இறுதியில் ஆந்திரா-ஒடிஷா மாநில எல்லை யில் 31 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பழிவாங்கும் வகையில் தற்போது ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த 6 அரசு ஊழியர்களை மாவோயிஸ்ட்கள் கடத்தி சென்றுள்ளனர்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கொல்ல மாவோயிஸ்ட் கள் டெல்லியில் உள்ள ஆந்திரா பவன் அருகே ஒத்திகை பார்த் துள்ள விவரம் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆந்திர மாநில போலீஸார், முதல்வருக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டு மென மத்திய உள்துறை அமைச் சகத்தை கேட்டுக்கொண்டனர்.

இதை ஏற்றுக் கொண்ட மத்திய உள்துறை உடனடியாக சந்திரபாபு நாயுடுவிற்கு பாதுகாப்பை அதி கரிக்க உத்தரவிட்டது. அதன்படி கூடுதலாக 4 என்.எஸ்.ஜி ஆயுதப் படைப் பிரிவுகள் முதல்வரின் பாதுகாப்பில் சேர்க்கப்பட உள்ளன. அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x