Last Updated : 25 Sep, 2016 11:58 AM

 

Published : 25 Sep 2016 11:58 AM
Last Updated : 25 Sep 2016 11:58 AM

பிரதமரின் பாதுகாப்பு செயலாளராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி நியமனம்

பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடு களை மேற்பார்வையிடும் செயலாளர் (பாதுகாப்பு) பதவிக்கு மூத்த ஐபிஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ண கினி நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர், முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆகியோரது பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு செயலாளர் (பாதுகாப்பு) வசம் தான் உள்ளது. இவர் தான் சிறப்பு பாதுகாப்புப் படை (எஸ்பிஜி) நிர்வாக தலைவராகவும் பணியாற்றுவார். தவிர ஜாம்மர் கருவிகள் கொள்முதல் செய்வது உள்ளிட்ட கொள்கை ரீதியிலான முக்கிய முடிவுகளையும் எடுப்பார். சிறப்பு பாதுகாப்புப் படையின் அனைத்து நடவடிக்கையும், இவரது ஒப்புதல் பெற்ற பிறகே செயல்படுத்தப்படும்.

தற்போது இப்பதவியில் உள்ள மலேய் குமார் சின்ஹா அடுத்த வாரம் ஓய்வு பெறு கிறார்.

இதையடுத்து புதிய செயலாளராக (பாதுகாப்பு) பிஹார் மாநிலத்தின் 1981-ஆம் ஆண்டு பிரிவை சேர்ந்த ராதாகிருஷ்ண கினி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இவர் தேசிய குற்றப்பதிவுகள் துறையின் தலைமை இயக்குநராக பதவி வகித்து வருகிறார். அடுத்த ஆண்டு நவம்பரில் இப்பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x