Published : 24 Apr 2017 07:10 AM
Last Updated : 24 Apr 2017 07:10 AM
இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் டெல்லி காவல் நிலையத்தில் ஆஜரான டிடிவி.தினகரனிடம் 2-வது நாளாக போலீஸார் விசாரணை நடத்தினர்.
அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக டெல்லி போலீஸார் சுகேஷ் சந்திரசேகரை கைது செய்தனர்.
முன்பணமாக கொடுக்கப் பட்டதாக கூறப்படும் ரூ.10 கோடியில், ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை சுகேஷிடம் இருந்து போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். சுகேஷ் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து டிடிவி.தினகரன் மீது 3 பிரிவுகளில் டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
டெல்லியில் நடைபெறும் விசா ரணைக்கு நேரில் ஆஜராகுமாறு டெல்லி போலீஸார் சம்மன் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியளவில் டெல்லி சாணக்யா புரி குற்றப்பிரிவு காவல் நிலை யத்தில் டிடிவி.தினகரன் ஆஜர் ஆனார். அவரிடம் இரவு 10 மணி வரை சுமார் 7 மணி நேரம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
நேற்று 2-வது நாளாக டிடிவி.தினகரனிடம் விசாரணை நடந்தது. இதனால், டிடிவி.தினகரன் நேற்று முன்தினம் டெல்லியிலேயே தங்கி விட்டார். நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு டெல்லி குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு தினகரன் வந்தார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT