Published : 24 Nov 2014 09:19 PM
Last Updated : 24 Nov 2014 09:19 PM
ராஜஸ்தான் ரயில் நிலையம் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் சுமார் 1 கிமீ தூரம் வரை ஓட்டுனர் இல்லாமல் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், தவ்சா மாவட்டத்தில் உள்ள பாங்க்ரி என்ற ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் ஒன்று டிரைவர் இல்லாமலேயே ரயில் நிலையத்தைத் தாண்டி 1 கிமீ தூரம் வரை சென்றுள்ளது.
இதனையடுத்து ரயில் நிலையத்தின் அசிஸ்டண்ட் ஸ்டேஷன் மாஸ்டர் கே.பி.மீனா, ஓட்டுனர் பிரிஜ்பிஹாரி, கார்டு ரமேஷ் சந்த், உதவி ஓட்டுனர் மான்சிங் ஆகியொர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
ஞாயிறன்று நடந்த இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த அலட்சியத்திற்கு காரணமானவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT