முதுமையில் தனிமை ஓர் ஆய்வு: வயதானவர்களுக்காக எந்த நாடும் இல்லை - இரண்டில் ஒருவர் தனிமையில்!

முதுமையில் தனிமை  ஓர் ஆய்வு: வயதானவர்களுக்காக எந்த நாடும் இல்லை - இரண்டில் ஒருவர் தனிமையில்!
Updated on
1 min read

100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் ஒவ்வொரு விநாடியும் மூத்த குடிமக்கள் தனிமையில் வாடுகிறார்கள். கிட்டத்தட்ட ஒவ்வொரு இரண்டாவது மூத்த குடிமகனுக்கும் தனிமையிலிருந்து தப்பமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ''மாறும் தேவைகள் மற்றும் இந்தியாவில் முதியோர் உரிமைகள்'' என்ற புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியா முழுவதும் 15 ஆயிரம் மூத்த குடிமக்களிடம் அகர்வால் ஃபவுண்டேஷன் ஆய்வு மேற்கொண்டது. அதன் அடிப்படையில் 47.49 சதவீதம் மூத்த குடிமக்கள் தனிமையில் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

நகரத்தில் அதிகம்

நகர்ப்புறத்தில் இந்நிலை மிகவும் மோசமாக உள்ளது. இங்குதான் 5000த்திற்கு 3,205 மூத்த குடிமக்கள் தனிமைத் துயரில் வாடுகிறார்கள்.

நகர்ப்புறப் பகுதிகளில் 64.1 சதவீதம் மூத்த குடிமக்கள் குடும்பத்தைவிட்டு பிரிந்து வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது. அதே சமயம் கிராமப் புறங்களில் 39.19 சதவீதம் (10 ஆயிரத்திற்கு 3919 கிராமப் பகுதியச் சார்ந்த மூத்த குடிமக்கள்) தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என ஆய்வு தெரிவிக்கிறது.

தனிமைக்குக் காரணம் யார்?

ஆனால் வயதான காலத்தில் இத்தகைய தனிமையின் கொடுமையை அனுபவிக்கும் நிலைக்குத் தள்ளிய காரணங்கள் என்ன? என்ற கோணத்திலும் ஆய்வு சென்றது.

இந்த கணக்கெடுப்பின்படி பதிலளித்தவர்களில் பெரும்பாலானவர்கள், தனிமையிலோ அல்லது துணையுடனோ வாழ்ந்து வருபவர்கள். மற்றவர்களுக்காக இப்படி இருப்பவர்கள்.

குடும்பத்தினரோடு பேச்சுவார்த்தையே இல்லாத நிலையில் இருப்பவர்கள் 27.3 சதவீதம். ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்கள் 19.06 சதவீதம். தனிமையை எதிர்கொள்ளவேண்டியநிலை மற்றும் சமூக நல்லுறவுக்கும், பரிவர்த்தனைக்கும் வாய்ப்பின்றி இருப்பவர்கள் 12 சதவீத மூத்தக்குடிமக்கள்.

36.78 சதவீதம் மூத்தக்குடிமக்கள் தனித்து வாழவோ அல்லது மனைவியுடன் தனிமையில் வாழும் நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்படுவதாகவோ தெரிவித்துள்ளார்கள்.

மனநல ஆலோசனைகள்

இந்தியாவில் ஒவ்வொரு ஐந்தாவது முதியவருக்கும் சில வகை மனநல ஆலோசனைகள் எவ்வாறு தேவைப்படுமென ஆய்வு தெரிவிக்கிறது.

ஆய்வின்போது பதிலளித்த 15,000 மூத்தக் குடிமக்கள் மொத்தத்திலும் 2,955 பேர் தங்கள் உறவினர்களிடமிருந்தோ அல்லது நண்பர்களிடமிருந்தோ ஆலோசனையை நாடியுள்ளனர். ஆனால் அதன்பிறகு மேலும் உளவியல் சிக்கல்களுக்கு தள்ளப்பட்டுள்ளதாக அந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது.

இத்தகைய பாதிப்புள்ளானவர்களில், நகர்ப்புற முதியவர்கள் (63.86 சதவீதம்) கிராமப்புறப் பகுதிகளைவிட (36.14 சதவீதம்) மனோதத்துவ ஆலோசனைகள் அதிகம் தேவைப்படுபவர்களாக உள்ளனர்.

இந்தியாவின் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 300 மாவட்டங்களில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் மூத்தக் குடிமக்களின் அவலநிலையை புள்ளிவிவரங்களோடு அறியமுடிந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in