Published : 25 Apr 2017 09:24 AM
Last Updated : 25 Apr 2017 09:24 AM

இந்தியை திணிக்கவில்லை: மத்திய அமைச்சர் விளக்கம்

மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை என்று மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜுஜு தெரிவித்துள்ளார்.

தேசிய நெடுஞ்சாலை மைல் கல்லில் ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியை எழுதுவதற்கு தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இந்தி மொழியில்தான் உரையாற்ற வேண்டும் என்ற பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அண்மையில் ஒப்புதல் அளித்தார். இதற்கும் தென்மாநில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜுஜு டெல்லியில் நேற்று கூறும்போது, “மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை. மற்ற மொழிகளைப் போன்று இந்தியையும் பிரபலப்படுத்தி வருகிறோம்” என்று தெரிவித்தார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x