

அஸ்ஸாம் தலைநகர் கவுகாத்தியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை சரியாக 9.46 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
நிலநடுக்கத்தால் வீடுகளின் கதவு, ஜன்னல்கள் லேசாக குலுங்கின. இருப்பினும் பெரிய அளவில் சேதம் ஏதும் ஏற்பட்வில்லை.
நிலநடுக்கம் காப்ரி ஆங்லாங் பகுதியில் பூமிக்கு அடியில் 20 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக, ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5-ஆக பதிவாகியிருந்தது.