Published : 21 Nov 2014 01:55 PM
Last Updated : 21 Nov 2014 01:55 PM
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக வரும் டிசம்பர் 5-ம் தேதி முதல் 132 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்மத்திய ரயில்வே துறை நேற்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தென் மத்திய ரயில்வே துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி சாம்பசிவ ராவ் நேற்று ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் உள்ள ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக வரும் டிசம்பர் 5-ம் தேதி முதல் 2015-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி வரை 132 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில்கள் ஹைதராபாத், நிஜாமாபாத், காகிநாடா டவுன், நரசாபூர், விஜயவாடா, மசூலிப்பட்டினம், சிர்பூர், காகஜ் நகர், கரீம் நகர், அவுரங்காபாத், அகோலா, ஆதிலாபாத் ஆகிய நகரங்களிலிருந்து கேரள மாநிலம் கொல்லம் வரை இயக்கப்படும். இதற்கான முன் பதிவுகள் இன்று தொடங்கும் என அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT