Published : 24 May 2017 08:47 PM
Last Updated : 24 May 2017 08:47 PM
உத்தரப் பிரதேசத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த தகவலின் பேரில், 2 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட உயர் அதிகாரிகளின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.
டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள லக்னோ, நொய்டா, கிரேட்டர் நொய்டா, மீரட், பாக்பத், மெயின்புரி உள்ளிட்ட இடங்களில் உள்ள 15 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இதில் 15 குழுக்கள் ஈடுபட்டன.
ஐஏஎஸ் அதிகாரியும் சுகாதாரத் துறை இயக்குநருமான ஹிருதய் சங்கர் திவாரி, கிரேட்டர் நொய்டா ஆணைய கூடுதல் தலைமை செயல் அதிகாரியும் ஐஏஎஸ் அதிகாரியுமான வி.கே.சர்மா, அவரது மனைவியும் பிராந்திய போக்குவரத்து அலுவலருமான மம்தா ஷர்மா, சிறப்பு செயலர் (சிறைகள்) எஸ்.கே.சிங் ஆகியோர் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்ததாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் வருமான வரி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் கடந்த மாதமும் சில உயர் அதிகாரிகள் மீது இதுபோன்ற நடவடிக்கையை வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT