Published : 11 Nov 2013 12:50 PM
Last Updated : 11 Nov 2013 12:50 PM

டிசம்பர் 5 முதல் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர்

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் டிசம்பர் 5- ஆம் தேதி தொடங்கி 20- ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான மத்திய குழு பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி தலைமையில் இன்று டெல்லியில் கூடி ஆலோசித்தது. அதன் பின்னர் கூட்டத்தொடரை டிசம்பர் 5- ஆம் தேதி முதல் 20- ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் டிசம்பர் 22ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் டெல்லி, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், டெல்லி, மிசோரம் என 5 மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் நாட்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x