Published : 30 Oct 2013 04:39 PM
Last Updated : 30 Oct 2013 04:39 PM

ஒடிசாவில் 3 பெண்கள் உள்பட 10 மாவோயிஸ்டுகள் சரண்

ஒடிசா மாநிலம் மல்கான்கிரி மாவட்டத்தில் 3 பெண் மாவோயிஸ்டுகள் உள்பட 10 மாவோயிஸ்டுகள் போலீஸாரிடம் சரண் அடைந்துள்ளனர்.

மல்கான்கிரி, மாவோயிஸ்டுகளை அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டமாகும், இந்த பகுதிகளில் அதிரடிப்படை போலீசார் மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று 3 பெண்கள் உட்பட 10 மாவோயிஸ்டுகள் போலீஸாரிடம் சரண் அடைந்துள்ளனர். சரணடைந்த மாவோயிஸ்டுகள் தாங்கள், மாவோயிஸ்டு அமைப்பின் மேல்மட்ட கமாண்டோக்களால் பல்வேறு வகையில் துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்தனர். எனவே திருந்தி வாழ்வதற்காக சரணடைவதாக தெரிவித்தனர்.

கடந்த 3 மாதங்களில் மல்கான்கிரி மாவட்டத்தில் 65 மாவோயிஸ்டுகள் போலீஸாரிடம் சரண் அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x