Published : 02 Jun 2016 07:45 AM
Last Updated : 02 Jun 2016 07:45 AM

விசாகப்பட்டினத்தில் 3 பெண் நக்சல்கள் போலீஸில் சரண்

ஆந்திரா, சத்தீஸ்கர், ஒடிசா ஆகிய மாநிலங்களில் நிகழ்ந்த பல்வேறு குற்றச்செயல்களில் தேடப்பட்டு வந்த 3 பெண் நக்சல்கள் நேற்று விசாகப்பட்டினத்தில் சரணடைந்தனர்.

கடபால லட்சுமி என்கிற சரிதா, தும்மா என்கிற விஜயா, ராமுலம்மா என்கிற பாரதி ஆகிய 3 பெண் நக்சல்கள் நேற்று விசாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ராகுல்தேவ் சர்மா முன்னிலையில் சரணடைந்தனர். இவர்களில் கடபால லட்சுமி மீது சத்தீஸ்கர், ஒடிசா மாநிலங்களில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

விஜயா மீது 23 வழக்குகளும், ராமுலம்மா மீது 8 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. லட்சுமி, ராமுலம்மா பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.4 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என சத்தீஸ்கர் மாநில அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x