Published : 02 Jun 2016 07:45 AM
Last Updated : 02 Jun 2016 07:45 AM
ஆந்திரா, சத்தீஸ்கர், ஒடிசா ஆகிய மாநிலங்களில் நிகழ்ந்த பல்வேறு குற்றச்செயல்களில் தேடப்பட்டு வந்த 3 பெண் நக்சல்கள் நேற்று விசாகப்பட்டினத்தில் சரணடைந்தனர்.
கடபால லட்சுமி என்கிற சரிதா, தும்மா என்கிற விஜயா, ராமுலம்மா என்கிற பாரதி ஆகிய 3 பெண் நக்சல்கள் நேற்று விசாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ராகுல்தேவ் சர்மா முன்னிலையில் சரணடைந்தனர். இவர்களில் கடபால லட்சுமி மீது சத்தீஸ்கர், ஒடிசா மாநிலங்களில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
விஜயா மீது 23 வழக்குகளும், ராமுலம்மா மீது 8 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. லட்சுமி, ராமுலம்மா பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.4 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என சத்தீஸ்கர் மாநில அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT