Published : 02 Jun 2016 09:02 AM
Last Updated : 02 Jun 2016 09:02 AM
தங்கள் அரசின் பொருளாதார தோல்விகளிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காக, எதிர்க் கட்சிகளுக்கு எதிராக கதை கட்டுவதும், அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்து வதும்தான் பிரதமர் மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் இணையதளத்தில் கூறப்பட் டிருப்பதாவது:
நேஷனல் ஹெரால்டு வழக்கு முதல், அகஸ்டா வெஸ்ட்லேண்ட், இஷ்ரத் ஜஹான் போலி என் கவுன்ட்டர் வரை அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதற்குத் தான் லாயக்கு என பாஜக நிரூபித்துள்ளது. ஆனால், அதை மெய்ப்பிக்க திராணியில்லை.
நிஜமாகவே ஏதேனும் தவறு நேர்ந்திருக்குமானால், வழக்கு தொடர்வதற்கு மோடி அரசால் முடியாது. தனது செயல்களால் பேசும் பிரதமருக்கும், பேசிக் கொண்டே இருப்பதால் தனது வேலைகளை மறந்து விடும் பிரதமருக்கும் வேறுபாடுகள் உண்டு.
அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஒப்பந்தம் தொடர்பான செயல்பாடு கள் வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் தொடங்கின. பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர்கூட, காங்கிரஸுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை என கூறியிருக்கிறார்.
மோடியைப் பொறுத்தவரை, மேக் இன் இந்தியா திட்டம் என்பது, எதிர்க்கட்சிகளுக்கு எதிராக கதை கட்டுவதுதான்.
நேஷனல் ஹெரால்டு வழக்கு, இஷ்ரத் ஜஹான் வழக்கு, அகஸ்டாவெஸ்ட்லேண்ட் வழக்கு தொடர்பாக குற்றச்சாட்டை சுமத்தி விட்டு, பிறகு தனது நிலைப் பாட்டில் அரசு மாற்றம் செய்து கொண்டுவிட்டது.
அவர்களின் குற்றச்சாட்டில் சிறிது உண்மையிருந்தாலும் கூட, காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக மிகப்பெரும் நடவடிக்கை கள் எடுக்கப்பட்டிருக்கும். ஆனால், அவர்களால் முடியாது. ஏனெனில் அவை ஆதாரமற்ற குற்றச்சாட்டு கள். அவை புனையப்பட்டவை.
எதிர்காலத்திலும் பிரதமர் மோடியால் மேலும் குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்படும். தங்களது ஆட்சியின் பொருளாதார தோல்விகளிலிருந்து மக்க ளைத் திசை திருப்பும் நோக்கத் துடன்தான் அவை முன்வைக் கப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த இணையதளத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT