குஜராத் கலவர வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை

குஜராத் கலவர வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை
Updated on
1 min read

குஜராத் கலவர வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்த மாநில உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

கடந்த 2002 மார்ச் 3-ம் தேதி 200 பேர் கும்பல் மேஷனா மாவட்டம், மேதா ஆத்ராஜ் கிராமத்தில் சிறுபான்மையினரை குறிவைத்து தாக்கியது. அப்போது சிலர், காலு மயன் சையது என்பவரையும் அவரது மகள் ஹசீனாவையும் எரித்து கொலை செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு மேஷனா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. குற்றம் சாட்டப்பட்ட 27 பேரையும் அந்த நீதிமன்றம் விடுதலை செய்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதிகள் ஆனந்த் தேவ், பி.என். காரியா ஆகியோர் அடங்கிய அமர்வு 11 பேர் குற்றவாளிகள் என்று அறிவித்தது. அந்த 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்த நீதிபதிகள், தலா ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வும் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in