Published : 11 May 2015 10:11 AM
Last Updated : 11 May 2015 10:11 AM
நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று காலை 11 மணிக்கு தீர்ப்பு வழங்கியது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார்.இது தொடர்பான விரிவான செய்திக்கு> | சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை |
919 பக்க தீர்ப்பில், ஜெ. விடுதலைக்கு முக்கியக் காரணங்களைச் சொல்லும் அம்சங்கள்:
சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலை செய்யப்படுவதற்கு உரிமை உடையவரே, அவரது வருவாய்க்கு அதிகமாக சேர்த்த சொத்தின் மதிப்பு 10%-க்கும் குறைவாகவே உள்ளது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. | முழுமையாக படிக்க ->ஜெயலலிதா விடுதலை சாத்தியம் ஆனது எப்படி?- 919 பக்க தீர்ப்பில் புரிதலுக்கு உதவும் 'எண்கள்' |
(நிகழ்நேரப் பதிவு நிறைவு)
15.50 PM: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ளதையடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பி.க்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். >| ஜெ. விடுதலை: நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பி.க்கள் கொண்டாட்டம் |
15.40 PM: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். >| அடுத்தது என்ன?- ஜெயலலிதா முக்கிய ஆலோசனை |
15.30 PM: கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முழு எழுத்து வடிவம் - ஆங்கிலத்தில் - >Text of Karnataka High Court's verdict on Jayalalithaa DA case
15.20 PM: இந்திய அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக ஜெயலலிதா விளங்கக்கூடும் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார். > | ஜெயலலிதா இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக முடியும்: தமிழருவி மணியன் |
15.00 PM: ஜனநாயக நாட்டில் வழக்குகளில் இத்தகைய திருப்பங்கள் ஏற்படுவது சகஜமே. இது ஒன்றும் இயல்புக்கு புறம்பானது அல்ல என பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். >| நம் நாட்டில் வழக்குகளின் திருப்பங்கள் சகஜமே: சுப்பிரமணியன் சுவாமி கருத்து |
14.40 PM: #JayaVerdict என்ற ஹேஷ்டேக் பிற்பகல் வரை இந்திய அளவில்தான் ட்ரெண்டிங்கில் முதலிடம் வகித்தது. தீர்ப்பு வழங்கிய பின்னர், தொடர்ந்து குறும்பதிவுகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதன் பலனாக, 2.30 மணியளவில் உலக அளவில் இந்த ஹேஷ்டேக் முதலிடம் பிடித்தது. >| ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு: ட்விட்டரில் தொடர்ந்து முதன்மை |
14.35 PM: சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கூறும்போது, "தீர்ப்பை தீர்ப்பாக மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர, இதனை அரசியலாக்கக் கூடாது” என்று தெரிவித்தார்.
14.20 PM: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டிருப்பது நீதிமன்றங்கள் மீதான மக்கள் நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். >| நீதிமன்றங்கள் மீதான மக்கள் நம்பிக்கை கேள்விக்குறி ஆகியுள்ளது: திருமாவளவன் |
13.58 PM: சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பால் தன் மீது சுமத்தப்பட்ட அவதூறி நீக்கப்பட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். >| தர்மத்துக்கும் நேர்மைக்கும் இறுதி வெற்றி: ஜெயலலிதா |
13. 50 PM: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் கருணாநிதி, இது இறுதி தீர்ப்பு அல்ல என்று குறிப்பிட்டுள்ளார். >| ஜெயலலிதா விடுதலை: கருணாநிதி கருத்து |
13.42 PM: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டிருந்தாலும் வரும் தேர்தலில் மக்கள் அவரை தோற்கடிக்க வேண்டும். ஊழலுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் தொடர்வார்கள் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
13.20 PM: சொத்துக் குவிப்பு வழக்கில், அரசியல் கட்சிகள் எதிர்பார்ப்புக்கு மாறாக தீர்ப்பு வந்துள்ளது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன கருத்து தெரிவித்துள்ளார். >| எதிர்பார்ப்புக்கு மாறான ஜெ. தீர்ப்பு: தமிழிசை கருத்து |
13.10 PM: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை ஒட்டி இன்று மாலை 5 மணியளவில் திரைப்பட வர்த்தக சம்மேளனத்தின் சார்பில் வெற்றிக் கொண்டாட்டம் நடத்தப்படுகிறது.
12. 50 PM: புதுச்சேரியில் அதிமுக அலுவலகம் முன் திரண்ட தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது, புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் மகிழ்ச்சியில் நடனமாடியதை அங்கிருந்த தொண்டர்கள் வெகுவாக ரசித்தனர்.
வீடியோ பதிவு:
12.43 PM: ஜெயலலிதா விடுதலையை விமர்சித்து தமிழக அரசியல் தலைவர்கள் அறிக்கை வெளியிட தயக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. >| ஜெ. வழக்கில் தீர்ப்பு: கருத்து சொல்ல தலைவர்கள் தயக்கம்? |
12.10 PM: சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக, அதிமுக தலைமை அலுவலகக் காட்சிகள் குறித்து ஒரு பார்வை. விரிவான செய்திக்கு: >| ஜெ. விடுதலை: ஆர்ப்பரிக்கும் அதிமுக... அமைதி காக்கும் திமுக |
12.00 PM: ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு வெளியானதும், கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்துக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் சென்றனர்.
11.30 AM: சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி வெறும் 2 நிமிடங்களில் தீர்ப்பை வழங்கினார். >| ஜெ. விடுதலை: இரண்டே நிமிடத்தில் தீர்ப்பை வாசித்த நீதிபதி |
11.25 AM: சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதி வீட்டருகே குவிந்திருந்த தொண்டர்கள் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டனர்.
11.22 AM: ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக எம்.பி.க்களுக்கு மக்களவையில் மற்ற எம்.பி.க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
11.10 AM: சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த ரூ.100 கோடி அபராதமும் ரத்து செய்யப்பட்டது.
11.00 AM: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார். மேலும், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
10.59 AM: நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கும் அறைக்குள் ஏராளமான பத்திரிகையாளர்கள் காத்திருப்பு.
10.55 AM: திமுக தலைவர் கருணாநிதி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
10.52 AM: கர்நாடக உயர் நீதிமன்ற வளாகத்தில் அதிமுகவினர் ஒருவர்கூட இல்லை.
10.47 AM: சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி வீடு முன்பு ஏராளமான திமுக தொண்டர்கள் திரண்டுள்ளனர்.
10.46AM: #JayaVerdict என்ற ஹேஷ்டேக் தொடர்ந்து இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதன்மையாக உள்ளது. இதில், ஆங்கிலத்திலும் தமிழிலும் குறும்பதிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. | விவரம் >ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு: ட்விட்டரில் தொடர்ந்து முதன்மை
10.45 AM: தீர்ப்பு வழங்கப்படவுள்ள அறை எண் 14-க்குள் வழக்கறிஞர்கள், செய்தியாளர்கள், நீதிமன்ற ஊழியர்கள் சென்றனர்.
10.40 AM: சென்னை போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதா வீட்டின் முன் அதிமுகவினர் திரண்டு வருகின்றனர். அதிமுக தொண்டர்கள் "எங்கள் அம்மா தென் இந்தியாவின் ஜான்சி ராணி, பாரதி கண்ட புதுமைப் பெண்" என்று கோஷம் எழுப்பினர்.
10.25 AM: திமுக வழக்கறிஞர்கள் தாமரைச் செல்வன், பாலாஜி சிங், நடேசன் ஆகியோர் நீதிமன்றம் வந்தடைந்தனர்.
10.15 AM: ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் பி.குமார், மணிசங்கர், செந்தில்நாதன் ஆகியோர் நீதிமன்றத்தை அடைந்தனர்.
10.10 AM: ஜெ., மீதான தண்டனை உறுதி செய்யப்பட்டால், உடனடியாக ஜாமீன் கோரியும்; கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் அவர் சரணடைய விலக்கு அளிக்கக் கோரியும், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதற்கும், அவரது வழக்கறிஞர்கள் தயார் நிலையில் உள்ளனர். > | ஜெ. தண்டனை உறுதியானால் அடுத்தது என்ன?- டெல்லியில் தயார் நிலையில் வழக்கறிஞர்கள்
10.08 AM: காலை 11 மணிக்கு, தீர்ப்பு வழங்கப்பட உள்ள நீதிமன்ற ஹாலுக்குள் வருவார் எனத் தெரிகிறது.
10.06 AM:கர்நாடக உயர் நீதிமன்றத்தில் உள்ள தனது அறைக்கு நீதிபதி சி.ஆர்.குமாரசாமி வந்துவிட்டார்.
10.02 AM: சென்னையின் அண்ணா சாலை உட்பட பல முக்கிய இடங்களில் சாலைகள் சற்றே வெறிச்சோடி கிடக்கின்றன. சென்னை போயஸ் தோட்டத்தில் அதிமுகவினர் குவிந்துள்ளனர். | படம்: ம.பிரபு
10.00 AM: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வெளியாவதை ஒட்டி தமிழகம் - கர்நாடக எல்லையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். விரிவான செய்திக்கு >| ஜெ. வழக்கில் இன்று தீர்ப்பு: தமிழக - கர்நாடக எல்லையில் சுமுக சூழல் நிலவுவதாக போலீஸ் தகவல் |
9.50 AM: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்பு 900 பக்கங்களுக்கு மேல் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரிவான செய்திக்கு >| ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: 900 பக்கங்களுக்கு மேல் தீர்ப்பு |
9.45 AM: பெங்களூருவுக்குள் அதிமுக வாகனங்கள் வர எந்த தடையும் இல்லை. சோதனைக்குப் பின்னர் கட்சி வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.
9.40 AM: தீர்ப்பு வெளியாவதால் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் பல லட்சம் மதிப்புள்ள பட்டாசு மற்றும் இனிப்புகளுடன் பெங்களூருவில் குவிந்துள்ளனர். >| பெங்களூருவில் கூடுதல் பாதுகாப்பு: பட்டாசு, இனிப்புகளுடன் காத்திருக்கும் அதிமுகவினர் |
9.35 AM: அதிமுக தொண்டர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ சங்குபனி விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்தனர். | படம்: கோபாலகிருஷ்ணன்
9.32 AM: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பு, சுப்பிரமணியன் சுவாமிக்கு முன்கூட்டியே தெரிந்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. > | தீர்ப்பு தேதி சுப்பிரமணியன் சுவாமிக்கு முன்கூட்டியே தெரிந்தது எப்படி? |
9.30 AM: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாவதை ஒட்டி இன்று காலை 6 மணிக்கே கர்நாடக உயர் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது.
வழக்கு கடந்து வந்த பாதை:
1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மற்றும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வருமானத்துக்கு அதிக மாக ரூ.66.65 கோடி சொத்துக் குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது.
18 ஆண்டுகளாக நடைபெற்ற இவ்வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா கடந்த செப்டம்பர் 27-ம் தேதி நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார்.
மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் மற்ற மூவருக்கும் தலா ரூ. 10 கோடி அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.
இதையடுத்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சிறப்பு அமர்வு அமைக் கப்பட்டு சி.ஆர்.குமாரசாமி நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஜனவரி 5-ம் தேதி தொடங்கிய மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 41 நாட்களில் நிறைவுபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT