Published : 14 Jun 2017 08:37 AM
Last Updated : 14 Jun 2017 08:37 AM

பாட்டியுடன் சில நாள் தங்கியிருக்க வெளிநாடு சென்றார் ராகுல் காந்தி

குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்பாளர் தேர்வு குறித்து ஆளும் பாஜக கூட்டணியும், எதிர்க்கட்சிகளும் டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளன. இந்நிலையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளிநாடு புறப்பட்டு சென்றார். இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில், ‘‘என் தாய்வழி பாட்டியை சந்திக்க விரைவில் செல்வேன். சில நாட்கள் அவர்கள் குடும்பத்தினருடன் தங்கியிருப்பேன்’’ என்று ராகுல் குறிப்பிட்டுள்ளார். பாட்டி இல்லத்தில் எவ்வளவு நாட்கள் இருப்பார் என்று தெரியவில்லை. ஆனால், ஜூன் 19-ம் தேதி ராகுல் காந்தி தனது 47-வது பிறந்த நாளை வெளிநாட்டில் கொண்டாடுவார் என்று கட்சி வட்டாரங்கள் கூறின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x