Published : 15 Mar 2017 08:32 PM
Last Updated : 15 Mar 2017 08:32 PM
ஜவகர்லால் நேரு பல்கலைகழகத்தின் (ஜேஎன்யூ) மாணவர் முத்துக்கிருஷ்ணன் உடல் புதன்கிழமை இரவு சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்கிறது.
டெல்லியில் ஜேஎன்யூவின் மாணவர் முத்துக்கிருஷ்ணனின் உடல் கடந்த திங்கட்கிழமை தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்டது. இது ஒரு மர்ம மரணம் எனக் கூறி, அவரது தந்தையான ஜீவானந்தம் டெல்லி போலீஸிடம் புகார் அளித்தார்.
இது குறித்து அவருடன் டெல்லி போலீஸார் நடத்திய பேச்சு வார்த்தையில் பிரேதப்பரிசோதனை செய்ய தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று டெல்லி எய்ம்ஸ் தடயவியல் துறை தலைவர் சுதிர்குமார் குப்தா தலைமையில் 5 பேர் கொண்ட மருத்துக்குழுவினர் முத்துக்கிருஷ்ணன் உடலை பிரேதப் பரிசோதனை செய்தனர். அதற்குப் பிறகு முத்துக்கிருஷ்ணன் உடல் டெல்லியில் இருந்து சென்னைக்கு 8.55 மணிக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
பின்னர், அங்கிருந்து சேலத்திற்கு சாலை வழியாக வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முத்துக்கிருஷ்ணன் தந்தை, உறவினர்கள், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் பயணிக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்கிறது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT