Published : 09 Oct 2013 09:35 AM
Last Updated : 09 Oct 2013 09:35 AM

டெல்லியில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து: 2 பேர் பலி

வடக்கு டெல்லியில், பாரா இந்து ராவ் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடம் ஒன்று இன்று காலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் தந்தை, மகன் பலியாகினர்.

சம்பவ இடத்துக்கு 6 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

விபத்துக்குள்ளான அடுக்குமாடி கட்டடம் 150 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x