Last Updated : 06 Apr, 2017 02:45 PM

 

Published : 06 Apr 2017 02:45 PM
Last Updated : 06 Apr 2017 02:45 PM

ஏழைகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாஜக வீரியத்துடன் பணியாற்றும்: மோடி

பாஜக நாட்டிற்காகவும், குறிப்பாக நட்டிலுள்ள ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மகா வீரியத்துடன் பணியாற்றும் என்று மோடி தெரிவித்துள்ளார்.

பாஜகவின் 37வது நிறுவன தினமான இன்று (வியாழக்கிழமை) நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "பாஜக நாட்டுக்காகவும், நாட்டிலுள்ள ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து மகா வீரியத்துடன் பணியாற்றும். இந்தியா முழுவதும் உழைக்கும் பாஜகவின் குடும்பத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

சமூகத்துக்காக பணியாற்ற ஒவ்வொரு செங்கல்லாக வைத்து உருவாக்கியுள்ள பாஜவின் பணியாளர்களின் கடின உழைப்பை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும், இந்தியாவிலுள்ள அனைத்து சமூகத்தினரும் பாஜகவின் மீது நம்பிக்கை வைத்திருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் டெல்லியிலுள்ள பாஜகவின் தலைமை அலுவலகத்திலுள்ள தீன் தயாள் உபாத்யாய் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய மோடி அவரை பாஜகவின் உத்வேகம் எனவும் குறிப்பிட்டார்.

தேசிய கட்சியான பாஜக மார்ச் மாதம் 5-ம் நாளில் 1980-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x