Published : 06 Mar 2014 10:26 AM
Last Updated : 06 Mar 2014 10:26 AM

ஆம் ஆத்மி - பாஜக மோதல் விவகாரம்: 14 பேர் கைது

டெல்லியில் பாஜக தலைமை அலுவலகம் அருகே ஆத் ஆத்மி - பாரதிய ஜனதா கட்சியினரிடையே நேற்று மோதல் வெடித்தது.

மோதலில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 14 பேரை டெல்லி போலீசார் புதன் கிழமை இரவு கைது செய்தனர்.

வன்முறையில் ஈடுபட்டது, அரசு ஊழியரை பணியை செய்யவிடாமல் தடுத்தது, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி முக்கிய பிரமுகர்கள் அசுதோஸ், சாஷியா இல்மி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 14 பேரும் இன்று பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x