Published : 11 Jul 2016 09:26 AM
Last Updated : 11 Jul 2016 09:26 AM

நாய் இறைச்சிக்கு நாகாலாந்தில் தடை

நாகாலாந்து மாநிலத்தில் நாய் இறைச்சி உணவு பிரபலமானது. இறைச்சிக்காக நாய் விற்பனை செய்யும் சந்தைகளும், நாய் இறைச்சி விற்பனைக்கடைகளும் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நாய் இறைச்சி உணவுக்கு தடை விதிக்க நாகாலாந்து அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக உள்ளாட்சி அமைப் புகளுக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.

மாநில அமைச்சரவையில் இதுதொடர்பான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. எனினும், இணைச் செயலாளர் ஒபாங்லா ஜமிர் இதுதொடர்பாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x