Published : 21 Feb 2017 09:27 AM
Last Updated : 21 Feb 2017 09:27 AM

காவிரி தீர்ப்பாய தலைவராக நீதிபதி அபய் மனோகர் நியமனம்

காவிரி நதி நீர் பங்கீட்டு தீர்ப்பாய தலைவராக இருந்த நீதிபதி என்.பி.சிங் 2012-ல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

2 ஆண்டு கள் காலியாக இருந்த தலைவர் பதவிக்கு ஓய்வுபெற்ற உச்சநீதி மன்ற நீதிபதி பி.எஸ். சவுஹான் 2014-ல் நியமிக்கப்பட்டார். அந்த பதவியில் இருந்து அவர் திடீரென‌ மாற்றப்பட்டார். கடந்த 2 ஆண்டுகளாக காவிரி நதி நீர் பங்கீட்டு தீர்ப்பாயத்தின் தலைவர் பதவி காலியாக இருந்தது.

இந்நிலையில் காவிரி தீர்ப்பாயத்தின் தலைவரை மத்திய அரசு விரைவில் நியமிக்க வேண்டும் என சமீபத்தில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாகூர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து காவிரி நதி நீர் பங்கீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக நீதிபதி அப‌ய் மனோகர் சப்ரே நேற்று மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் பணியில் உள்ள நீதிபதி அபய் மனோகர் சப்ரே, வருகிற 2019 ஆகஸ்ட் 27-ல் ஓய்வு பெற உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x