Published : 01 Jan 2017 11:53 AM
Last Updated : 01 Jan 2017 11:53 AM
ஆந்திராவில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற் சாலையில் நேற்று காலையில் வெடிவிபத்து ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழந்தனர்.
நெல்லூர் அருகே பொர்லுகட்டா பகுதியில் உரிய அனுமதியின்றி ஒரு பட்டாசு தொழிற்சாலை இயங்கி வந்துள்ளது. இதில் 30-க்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். நேற்று காலையில் திடீரென அந்த தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக் கும் பணிகளில் ஈடுபட்டனர். நெல்லூர் மாவட்ட ஆட்சியர் முத்தி யால ராஜு, காவல் கண்காணிப் பாளர் விஷால் குன்னி மற்றும் போலீ ஸாரும் அங்கு சென்றனர்.
தீயை கட்டுக்குள் கொண்டு வந்த பிறகு மீட்புப் பணி மேற் கொள்ளப்பட்டது. இதில் 2 தொழி லாளர்கள் உயிரிழந்தது தெரிய வந்தது. மேலும் 14 பேர் படுகாய மடைந்தனர். இவர்களை நெல்லூர் அரசு மருத்துவமனையில் அனு மதித்தனர். அங்கு சிகிச்சை பல னின்றி மேலும் ஒருவர் உயிரிழந் தார்.
சிகிச்சை பெற்று வரும் 13 பேரில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.இதுகுறித்து நெல்லூர் போலீ ஸார் வழக்கு பதிவுசெய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். தொழிற்சாலையில் பணியில் இருந்த ஒரு தொழிலாளி சிகெரெட் பிடித்து அதனை அணைக்காமல் போட்டதே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசா ரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வெடி வெபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தா ருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று அமைச்சர் நாராயணா அறிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT