Last Updated : 07 Apr, 2017 08:09 AM

 

Published : 07 Apr 2017 08:09 AM
Last Updated : 07 Apr 2017 08:09 AM

ஒடிசாவில் மின்கம்பி அறுந்து விழுந்து 3 பேர் பலி

ஒடிசாவில் உயரழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் 2 பெண்களும் 5 வயது சிறுமியும் உயிரிழந்தனர்.

ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டம், படபாலி என்ற கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை இச்சம்பவம் நேரிட்டது. பிரவசினி என்ற 5 வயது சிறுமி டியூஷன் வகுப்பு முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது, சிறுமியின் பாதுகாப்புக்காக பிரவத் நளினி (22), அவரது தாயார் பிரதிமா மஞ்சரி (55) ஆகியோர் உடன் சென்றனர்.

அப்போது 11 கிலோ வாட் உயரழுத்த மின்கம்பி அறுந்து அவர் கள் மீது விழுந்தது. இதில் மூவரும் அதே இடத்தில் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கிராம மக்கள் துப்ரி நரன்பூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகள் தொடர்பாக உயரதி காரிகள் அளித்த உறுதிமொழியை ஏற்று, பின்னர் போராட்டத்தைக் கைவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x